1. முதல் விசாரணை பத்திரிகையில் உறுப்பினர் ஆவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
2. ஆர்வமுள்ள நபர்கள் , பத்திரிகையாளர் ,தொழில்நுட்ப பிரிவு , எடிட்டர் ,எழுத்தாளர் , மக்கள் தொடர்பாளர் , பொது சிந்தனையாளர்கள் , தனித்திறமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் .
3. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுக்கான விபரங்களை "https://www.hellonewschannel.com/new-member/login/login" join with us பதிவிட்டு அவர்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கி பின் இந்த அடையாள எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பப்படிவம் மற்றும் உறுதிமொழி ஆவணத்தை பிரதி எடுத்து அதை பூர்த்தி செய்து அங்கு குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.
4. உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் நீக்குவது முதல் விசாரணை பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நபர்கள் முறைப்படி தகவல் தெரிவித்துவிட்டு எடுக்கப்படும் முடிவே இறுதியானதாகும். உறுப்பினர்களையோ அங்கீகாரம் வழங்கப்பட்ட நபர்களையோ எப்பொழுது வேண்டுமானாலும் சேர்ப்பது, மாற்றம் செய்வது, நீக்குவது ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்மட்டுமே முழு அதிகாரம் உண்டு.
5. முதல் விசாரணைபத்திரிகையின் துணை அலுவலகங்கள் அனைத்தும் தலைமையின் அறிவுரை மற்றும் பரிந்துரையின்படி மட்டுமே செயல்பட வேண்டும்.
6. முதல் விசாரணைபத்திரிகையின் உறு்பினர்கள் இந்த செயலியை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
7 . முதல் விசாரணைபத்திரிகையின் உறுப்பினர் விலக வேண்டும் என்றால் தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ தெரிவிக்க வேண்டும்.
8 . இந்த செயலியில் தரப்படும் தங்களைப் பற்றிய விவரங்கள் உண்மையானதாக இருக்கவேண்டும் பிற்காலத்தில் இதில் ஏதேனும் தவறு இருப்பதாக தெரிந்தால் அவர்கள் உடனடியாக நீக்கப் படுவார்கள்.
9 . விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களுக்கான விபரங்களை இந்த செயலியில் பதிவிட்டு அவர்களுக்கான அடையாள எண்ணை உருவாக்கி, பின் இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, விண்ணப்பப்படிவம் மற்றும் உறுதிமொழி ஆவணத்தை பிரதி எடுத்து அதை பூர்த்தி செய்து அங்கு குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.
செய்தியாளருக்கான பண்புகள்:-
செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.